கல்வி கடன்களை ரத்து செய்து இலவச கல்வி வழங்க கோரிக்கை

தொண்டி, பிப்.23: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிநேயநேய மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் தொண்டியில் நடைபெற்றது. மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீப்ரி முன்னிலை வகித்தார். கல்விக்காக தமிழகத்தில் ஏகப்பட்டோர் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசு தற்போது விவசாய

கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வியையும் இலவசமாக

வழங்க நடவடிக்கை எடு்கக வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்டவை ஒரு வரையறை இல்லாமல் விலை உயர்வு செய்து வருகின்றனர். இது சாமானிய ம்ககளை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் விலை கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

Related Stories: