சிங்கம்புணரி, பிப். 23: சிங்கம்புணரி அருகே புதுவயலில் உள்ள ராயன் கருப்பர் கோயில் மாசி களரி விழா நடைபெற்றது. இதையொட்டி சந்திவீரன் கூட்டத்திலிருந்து சுவாமி ஆபரண பெட்டி தூக்கிக் கொண்டு சாமியாடி மற்றும் பொதுமக்கள் புதுவயல் ராயன் கோயிலை அடைந்தனர். அங்கு இரவு ராயன் கருப்பருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று சாமியாட்டம் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.