ஆபத்தான மின் கம்பத்தை மாற்றாமல் இழுத்தடிப்பு

காளையார்கோவில், பிப்.23:  குருந்தனி கிராமத்தில் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு கொண்டு செல்லும் மின் கம்பம் முற்றிலும் உடையும் நிலையில் உள்ளது. மாற்றித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளையார்கோவில் அருகில் குருந்தனி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் செல்லக்கூடிய பகுதியில் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயர் அழுத்த மின்சாரத்திற்கான மின் கம்பம் ஒன்று குருந்தனி பஸ் நிலையம் அருகில் ரோட்டோரத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கம்பத்தை மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: