ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

ராணிப்பேட்டை, பிப்.20: முத்துக்கடையில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலசங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எத்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, மதியழகன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், மாநில இணை செயலாளர் நிலவு குப்புசாமி உட்பட பலர் பேசினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். முத்துக்கடையில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: