லாரி ேமாதி ஆசிரியை பலி

வாலாஜா,பிப்.21: ஆற்காட்டை சேர்ந்தவர் சுமதி(50). இவர் மேலபுலம்புதூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரவி. வியாபாரி. இந்நிலையில், சுமதி பள்ளிக்கு செல்வதற்காக நேற்று கணவர் ரவியுடன் பைக்கில் சென்றார்.அப்போது, வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கியெறியப்பட்டு படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சுமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: