க.பரமத்தி, பிப்.21: க.பரமத்தி ஒன்றியம் முன்னூர் ஊராட்சி மோளபாளையம் பகுதியில் மரகதவள்ளி சமேத கல்யாண மரகதீஸ்வரர் மலை கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் மரகதவள்ளி சமேத கல்யாண மரகதீஸ்வரர், உத்தண்டவேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டு சுற்று பகுதி பக்தர்களால் வழிபடுகின்றனர். இக்கோயிலில் மாசி மக திருவிழாவையொட்டி வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை )இரவு 8மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு செல்லுதல். மறுநாள் 26ம்தேதி( வெள்ளி) காலை 11மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது.