போர்ட்-ஓ-பிரின்ஸ்: வடக்கு ஹைதியில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு மலை உச்சிக் கோட்டையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிட்டாடல் லாஃபெரியரில் பிரபல சுற்றுலா தலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் 30 பேர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கேப்-ஹைட்டியன் நகரின் நகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மிலோட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலால் “மூச்சுத்திணறல், மிதிபடுதல் மற்றும் சுயநினைவு இழத்தல் போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நடைபெற்ற பாரம்பரிய விழாக்களில் கலந்துகொண்ட பலரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் மாயமாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
ஹைதி தேசிய காவல்துறை ஒரு தனி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூறியுள்ளது. பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்குமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
