திட்டக்குடி, பிப். 21: திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் விருத்தாசலம் சார் ஆட்சியர் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் ஆகிய தாலுகா அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம், வங்கிகள் மூலம் ஆடு, மாடுகள் வாங்க கடன் உதவி, சலவை பெட்டிகள் உதவி, உதவி தொகை ஆகியவைகளை கேட்டு மனு கொடுத்தனர். இந்த முகாமில் 324 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து இந்த முகாமில் 3 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள்.