சென்னை: கடன் தகராறு காரணமாக நிலத்தரகர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மகன் பரிதாப இறந்தார். கொருக்குப்பேட்டை தங்கவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு சியாமளா (45) என்ற மனைவி, கார்த்திக் (22) உள்பட 3 மகன்கள் உள்ளனர். இதில், கார்த்திக் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் இருந்து வெங்கடேசனுக்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.