பைப்லைன் உடைப்பை சீரமைக்காததால் சாலையில் வழிந்தோடும் குடிநீர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 193வது வார்டுக்குட்பட்ட துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வேம்புலி அம்மன் கோயில் தெருவில் பதிக்கப்பட்ட பைப்லைன், கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்தது. இதனால், குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள காலி இடத்தில் குளம் போல் தேங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, மேற்கண்ட பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பைப்லைனை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உடைந்த பைப்லைனை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: