286 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி

திருப்பூர், பிப். 21:  திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த 81 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம்,  ரூ.20 லட்சத்து 25 ஆயிரம், அதே போல் பட்டப்படிப்பு படித்த 205 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் ரூ.1, கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி தொகையும் வழங்கப்பட்டது. இதன்படி, மொத்தம் 286 பயனாளிகளுக்கு 2 கிலோ 288 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1,02,27,932 ஆகும். இதனை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் வழங்கினார். விழாவில் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: