போக்குவரத்து விதி மீறல் காங்கயத்தில் 2520 வழக்கு பதிவு

காங்கயம், பிப். 21: காங்கயத்தில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய  பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விதி மீறும் வாகன  ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். கடந்த ஜனவரி  மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், ஹெல்மெட்  அணியாமலும், லைசென்ஸ் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் டிரைவிங்,  அதிவேகமாக வாகனம் ஓட்டியது, மாஸ்க் இல்லாமல் இருப்பது உட்பட, பல்வேறு  விதிகளை மீறியதாக, 2520 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து,  அவர்களிடம் இருந்து 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு,  வசூல் செய்யப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன்  தெரிவித்தார்.

Related Stories: