குன்னூர்,பிப்.21:குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத 4 கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். . கடந்த 10 ஆண்டுக்கு முன் கேரட்டைச் சுத்தம் செய்வதற்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஊட்டி, கேத்தி பாலாடா, முத்தொரை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இயந்திரங்கள் நிறுவப்பட்டன.