பெட்ரோல் பங்க் அருகே பைக் தீப்பிடித்து எரிந்தது

குன்னூர்,பிப்.21:குன்னூரில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்  ரயில்வே காலனியில் வசிப்பவர் தாமஸ்(21) கல்லூரி மாணவர். நேற்று இவர்  தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். குன்னூர்- ஊட்டி சாலையில் பாலவாசி பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் அடித்து விட்டு  பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது பைக் திடீரென தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்ச்சித்தனர். ஆனால் தீ அணையாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் பைக்கில் பற்றிய தீயை அனைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: