நாளை மின்தடை பகுதிகள்

கோவை, பிப். 21: கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கள்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர் (ஒரு பகுதி), நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம், ஆறுமுக கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், பேரூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

Related Stories: