கோவை, பிப். 21: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கோவையில் நாளை தி.மு.க. ஆர்பாட்டம் நடக்கிறது. கோவை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ. (மாநகர் கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர் மேற்கு), மருதமலை சேனாதிபதி (புறநகர் கிழக்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்ந்து வருகிறது. இதை, மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மக்களின் இன்னல்களை போக்க முன்வராத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நாளை (திங்கள்) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.