திமுக பாடல் பிரசார பேரணி

ஓமலூர், பிப்.21:  ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 67 கிராமங்களில், திமுக சார்பில்  ‘ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு’ பாடல் பிரசார பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய  செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமார், பாலசுப்ரமணியம், தாரமங்கலம் ராஜஅய்யப்பன்,  காடையாம்பட்டி ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். நகர செயலாளர்கள் ரவிச்சந்திரன், திருநாவுக்கரசு, லோகநாதன் முன்னிலை வகித்தனர். பேரணியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்  ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர்  திருநாவுக்கரசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், கருணாகரன், அருண்பிரசன்னா, சம்பு சண்முகம், ரமேஷ், உலகு,  ரவிக்குமார், ஜெயக்குமார்,  பிரபு, சிலம்பரசன்,  சீனிவாசன், பிரகாஷ், பெருமாள், கோபால்சாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

Related Stories: