டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி பலி

தாரமங்கலம், பிப். 21: தாரமங்கலம் அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் முருகன் (45). இவர் அதே ஊரைச்சேர்ந்த பழனிசாமி என்பவரின் பாஸ்ட்புட் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, தனது டூவீலரில் முருகன் கடையை திறக்க சென்றார். வழியில் மடத்தூரில் வசிக்கும் தன்னுடன் வேலை செய்யும் வடமாநில வாலிபர் ஜெயந்த் வர்மனிடம் சாவி வாங்கிக்கொண்டு, அவரையும் கடைக்கு அழைத்துச்சென்றார். பனஞ்சாரி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த கார், டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை முருகன் உயிரிழந்தார். ஜெயந்த்வர்மன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முருகனின் மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: