கெங்கவல்லி ஒன்றியத்தில் திட்டப்பணிகள் துவக்கம்

கெங்கவல்லி, பிப்.21: கெங்கவல்லி ஒன்றியம் ஜங்கமசமுத்திரம் ஊராட்சி சேரடி, பச்சமலை ஊராட்சி வேப்படிப்பாலக்காடு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் திறந்து வைத்தார். விழாவில் ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ், ஒன்றியக்குழு தலைவர் பிரியா பாலமுருகன், கிராம ஊராட்சி ஆணையாளர் செந்தில், பச்சைமலை, ஜங்கமசமுத்திரம் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், கெங்கவல்லி ஒன்றியம் பச்சமலை ஊராட்சியில், இடைப்பாடி முதல் கட்டக்காடு வரை ₹8.05 கோடி மதிப்பிலும், உடும்பியம் பகுதியில் ₹2.57 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில், பச்சமலை ஊராட்சி தலைவர் சின்னமணி, வனத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: