சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குமாபாளையம், பிப்.21: குமாரபாளையம் அன்பு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தி பேரணியாக சென்றனர். குமாரபாளையம் நகராட்சியில், பள்ளிபாளையம் பிரிவு சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை நடைபெற்ற இந்த பேரணியை, அன்பு கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ரமேஷ், போலீஸ் எஸ்ஐ ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் பேரணிக்கு தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுடன் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். 

Related Stories: