குன்றத்தூர், பிப். 21: மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடு மற்றும் கடைகளின் முன்பாக நிறுத்தி வைத்த விலையுயர்ந்த பைக்குகள் அடிக்கடி திருடு போனது. இதுதொடர்பாக, மாங்காடு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து போலீசார், மர்மநபர்களை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் மாங்காடு பிரதான சாலையில் நேற்று முன்தினம் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே வேகமாக வந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர்.