சரிவிகித உணவை உட்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பவர் 23ம் தேதி சரியான சரிவிகித உணவு உட்கொள்ளும் இயக்க விழிப்புணர்வு விழா கலெக்டர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் நடமாடும் உணவு ஆய்வகம் ஆகியவற்றை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைக்கபட்டது.

இதன்மூலம் சரியான சரிவிகித உணவு உட்கொள்ளும் விழிப்புணர்வு பொது மக்களிடம் பெரும் வரவேற்பைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்களால் வாழ்க்கை முறை, நோய் அதிகரித்து வருவதை தவிர்க்க பொதுமக்கள் சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு தகவல்களுடன் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories: