லாரி மோதி வாலிபர் பலி

பூந்தமல்லி, பிப்.21: வளசரவாக்கம் திருநகர் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால்  பெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகன் அசோக்குமார்(21). தனது தந்தையை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய நண்பர் சசிகுமாருடன் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபோது பைக் மீது லாரி மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். சசிகுமார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் தமிழரசனை கைது செய்தனர். 

Related Stories: