எங்க ஏரியா உள்ளே வராதே காங். வேட்பாளரை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்த பாஜவினர்: பாலக்காடு தொகுதியில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ், சிபிஎம், பாஜ இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் நடிகர் ரமேஷ் பிஷாரடியும், இடதுசாரி கூட்டணி சார்பில் ரசாக்கும், பாஜ கூட்டணி சார்பில் சோபா சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பிஷாரடி வடக்குந்தரை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார்.

அப்போது திடீரென அங்கு வந்த பெண்கள் உள்பட பாஜ தொண்டர்கள் இந்தப் பகுதிக்குள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று கூறி ரமேஷ் பிஷாரடியை தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரமேஷ் பிஷாரடி அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய முடியாமல் திரும்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உள்பட அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: