கெஜ்ரிவாலுடன் மோதல் ராகவ் சதாவை நீக்க ஆம்ஆத்மி கடிதம்

புதுடெல்லி: பஞ்சாபை சேர்ந்த ஆம் ஆத்மி மாநிலங்களை எம்பி ராகவ் சதா. இவர் கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி கட்சி தொடர்பான விஷயங்களில் மவுனம் காத்து வருவதாக கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இவர் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் எம்பி ராகவ் சதாவை மாநிலங்களவை கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி மாநிலங்களவை செயலகத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் எழுதியுள்ளது. மேலும் இந்த கடிதத்தில்,\\” ராகவ் சதாவிற்கு பதிலாக அசோக் மிட்டலை மாநிலங்களவையின் கட்சியின் துணை தலைவராக நியமிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் ஒதுக்கீட்டில் இருந்து ராகவ் சதா அவையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கக்கூடாது’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: