செங்கல்பட்டு: நடுரோட்டில் லாரியை மறித்து, டிரைவரிடம் மர்மநபர்கள் 2 பேர் பணம் பறிக்க முயன்றனர். அப்போது, ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பயணிகள் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு ஒரு லாரி புறப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (40), லாரியை ஓட்டினார். செங்கல்பட்டு அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பழவேலி அருகே சென்றபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், திடீரென சாலை நடுவே வந்து லாரியை மறித்து நிறுத்தினர். உடனே, டிரைவர் லாரியை நிறுத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் 2 பேரும், லாரியில் ஏறி, டிரைவர் சரவணனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்ைத பறித்து கொண்டு தப்பினர். அந்த நேரத்தில், அவ்வழியாக கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், நடுரோட்டில் நிற்கும் லாரி மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்து நின்றது.