×

வானமாமலை கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் நாங்குநேரியை அதிக வசதி கொண்ட தொகுதியாக மாற்றுவேன்

நெல்லை, ஏப்.1: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து, நாங்குநேரியை அதிக வசதி கொண்ட தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் எனக்கூறி வீதி, வீதியாகச்சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் (தோட்டாத்ரி நாதன் கோயில்) பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர், வீதி வீதியாக நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் ‘நாங்குநேரி தொகுதியை அதிக வசதி கொண்ட முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தருவேன்’ என்று கூறி ‘குக்கர்’ சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், அமைப்பு செயலாளர் பரமசிவம், மருத்துவரணி இணைச் செயலாளர் நோவா செல்வராஜ், எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சீனிக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாளை பொன்னுச்சாமி, நெல்லை ஆறுமுகம், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Vanamalai Temple Therottam ,Nanguneri ,Nellai ,AMMK ,Isakkimuthu ,Vanamalai Perumal Temple Therottam ,Nanguneri Vanamalai Perumal… ,
× RELATED கோடை காலத்தில் கண்களை பராமரிக்கும் முறை