ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மிகவும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்காசிய போர்ச் சூழல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஈரான், இஸ்ரேல் போரால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தலைவர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளேன். உரையாடலின் போதும் இந்தியர்களுடைய பாதுகாப்பு குறித்து அதிகளவில் பேசப்பட்டது. வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

Related Stories: