ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் கணக்கெடுப்பு இன்று முதன்முறையாக நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகளும், இருவாச்சி பறவைகள் உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் ஏராளமாக வசித்து வருகின்றன.
இந்த நிலையில் புலிகள் காப்பகத்தில் உள்ள இருவாச்சி பறைகளை கணக்கெடுப்பு முதன்முறையாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
