புதுடெல்லி: ரூ.228 கோடி மதிப்பிலான மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியின் மகன் அன்மோலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ரூ.225 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. இதன்காரணமாக அந்த கணக்கு செயல்படாத சொத்தாக மாறியது. இதன் அடிப்படையில் யூனியன் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அன்மோல் மற்றும் இதர நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அன்மோலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். இதனையடுத்து இன்றும் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
