சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். வீட்டு சிலிண்டரை வணிக ரீதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் 044-28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் புகாரளிக்கலாம்.
