பண்ருட்டி, பிப். 11: பண்ருட்டி அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக மதுவில் விஷம் கலந்த நண்பனின் மனைவி கைது செய்யப்பட்டார். கணவரை கொல்வதற்காக அவர் விஷம் கலந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன்(43), ராமலிங்கம்(55). கூலி தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள். கடந்த 8ம் தேதி 2 பேரும் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து குடித்துள்ளனர். அதில் மீதமிருந்த ஒரு மது பாட்டிலை ராமலிங்கம் வீட்டில் வைத்துள்ளனர். மறுநாள் காலையில் வேலைக்கு சென்ற இடத்தில், அந்த மதுபாட்டில் எங்கே என்று பாலமுருகன் கேட்டுள்ளார். அந்த பாட்டில் வீட்டில் இருப்பதாக கூறிய ராமலிங்கம் வீட்டிற்கு சென்று மதுபாட்டிலை எடுத்து வந்துள்ளார். அதில் பாதி அளவிற்கு ராமலிங்கம் குடித்து விட்டு மீதியை பாலமுருகனிடம் கொடுத்துள்ளார். மது குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். 2 பேரையும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மதுவில் விஷம் கலந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே பாலமுருகன் உயிரிழந்தார். ராமலிங்கம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலமுருகன் மனைவி ஜானகி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்கள் 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் மதுபாட்டில் வாங்கிய டாஸ்மாக் கடையிலும் சோதனை நடத்தினர். இதனிடையே ராமலிங்கத்தின் மனைவி ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் மதுபாட்டிலில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: