கடலூர், பிப். 9: பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் புலவேந்தன். இவரது மகன் பிரகாஷ் ( 25). அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடந்த 9.12.2018 அன்று மாணவி, தண்ணீர் எடுப்பதற்காக பாத்திரத்துடன் அருகில் உள்ள குச்சிரான் வாய்க்காலுக்கு சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த பிரகாஷ், மாணவியை வாய்க்கால் கரையோரம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் சத்தம் கேட்டு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்தனர்.