×

கோரிகையை வழியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

கரூர், மார்ச். 4: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இநத காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் அதிகளவு கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : Revenue Department ,Karur ,Karur District Collector ,District ,Anbazhagan ,
× RELATED க.பரமத்தி அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு