- கூட்டுறவுத் தொழிலாளர் சங்கக் கூட்டம்
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு
- யூனியன்
- சிஐடியு
- மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பொருட்கள்
- சாலை கிளை
- வளர்மதி
- மகா சபை கூட்டம்
- வேலுசாமி
- திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத் தொழிலாளர் சங்கம்
- ஜனாதிபதி...
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை கிளை (வளர்மதி) மகா சபை கூட்டம்,திருப்பூரில் (சிஐடியு) அலுவலகத்தில் நடந்தது. இதற்கு வேலுச்சாமி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தலைவர் கெளதமன் மற்றும் மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பண்டகசாலை பணியாளர்களுக்கு தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்த அரசு அறிவித்த ஊக்கத்தொகை, ஒரு கிளஸ்டர்க்கு ரூ.200 வீதம் உடனடியாக வழங்க வேண்டும். நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசிய தேவையான டேபிள், சேர், மின் விசிறி உள்ளடக்கிய சாதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
