இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி என்கிறார்கள். தவெக களத்தில் இல்லை. தவெக தலைவர் ஜோசப் விஜய் களத்திற்கு வருவதில்லை. விஜய் செல்லும் இடங்களில் ரசிகர்கள் உயிரிழப்பதால் மக்கள் விஜய்யை வெறுக்க தொடங்கி விட்டனர். விஜய் மனைவியுடனே கூட்டணி வைக்க முடியவில்லை, அப்புறம் எப்படி மக்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற முடியும். ஈழத்து பெண்ணான சங்கீதாவை விஜய் மதம் மாற்றி திருமணம் செய்து உள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழர்களின் வாழ்க்கை முறையை விஜய் ஏற்க மறுக்கிறார். விஜய் ஒரு நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருக்கிறார். திருமண வயதில் மகனை வைத்து கொண்டு, விஜய் நடிகையுடன் தொடர்பில் உள்ளதால் தலைவனாக இருக்க தகுதியற்றவர். தேர்தலுக்கு முன்னர் தவெக கடையை சாத்த வேண்டிய நிலைக்கு வரும். இவ்வாறு கூறினார்.
நடிகையுடன் லிவிங் டுகெதர்: தவெக கடையை மூடும் நிலை வரும்: முடிச்சு விட்டஅர்ஜூன் சம்பத்
- டுகெதீர்
- சம்பத்
- இந்து மக்கள் கட்சி
- அர்ஜுன் சம்பத்
- மதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜோசப் விஜய்
- விஜய்
