கேரளா: கண்ணூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சர் வீணா ஜார்ஜை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை கண்டித்து கடந்த ஒரு வாரமாக மாணவர் சங்கத்தினர் போராட்டம். கண்ணூர் ரயில் நிலையத்துக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் வர உள்ளதை அறிந்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சுகாதாரத் துறையின் மோசமான செயல்பாடுகளுக்கு அமைச்சரே காரணம் என மாணவர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
