கூடலூர் அருகே அட்டகாசம் பாக்கு மரங்களை சேதப்படுத்திய யானை

கூடலூர் : கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை பாக்கு மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இங்கு வசிக்கும் ருக்மணி தேவி என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு சுமார் 10க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை அந்த யானை சேதப்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த வாரத்தில் மேலும் சில பாக்கு மரங்களை இந்த யானை இப்பகுதியில் சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

காட்டு யானைகள் நடமாட்டம் மீண்டும் இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நவீன வழிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் யானைகள் தொடர்ந்து இங்கு வருகிறது. இந்த யானை கடந்த சில வாரங்களாக கிராமங்களை ஒட்டிய வனப் பகுதிகளில் நடமாடி இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: