திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களுக்கான வயது வரம்பு 36ல் இருந்து 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அரசு தேர்வாணையத் தேர்வு எழுதுவதற்கு இதுவரை வயது வரம்பு 36 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 36லிருந்து 40ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர் 43 வயது வரையிலும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 வயது வரையிலும் கேரளாவில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதலாம்.
