புதுடெல்லி: பிஎப் கணக்குகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இபிஎப்ஓ 3.0 என்ற டிஜிட்டல் மாற்ற முயற்சியில் ஒன்றிய அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இது கோர் பேங்கிங் சிஸ்டம்-இயக்கப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், காகித வேலைகளைக் குறைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. எளிதாக பணம் எடுக்கவும் வழிவகை செய்கிறது.
பணம் உரிமைக்கோரலுக்கான காலம் 20 நாட்களில் இருந்து 3 நாட்களுக்கும் குறைவாகக் குறைக்கிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த போது 7.11 லட்சம் பிஎப் கணக்குகள் எந்தவித இயக்கமும் இல்லாமல் சுமார் ரூ.1000 பணத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளை விரைவில் மூட பிஎப் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இந்த 7.11 லட்சம் கணக்குகளில் மொத்தம் ரூ.30.52 கோடி நிதி உள்ளது. இந்த நிதியை 7.11 கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
