கோவையில் தோல்வி பயம்; பரிசுப் பொருட்களை வாரி வழங்கும் அதிமுக

 

கோவை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச.19 ம் தேதி வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்.23 ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய முடியாது.

அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் புதிய வளர்ச்சிப் பணிகள் துவக்கப்படாது. இதனிடையே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெ., இபிஎஸ் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஹாட் பாக்ஸ் மற்றும் எவர்சில்வர் தட்டுகளை வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.
தோல்வி பயத்தில்தான் அதிமுகவினர் இப்போதே பரிசுப் பொருட்களை கொடுக்க ஆரம்பித்து விட்டனர் என்று பலரும் கமென்ட் அடிக்கின்றனர்.

 

Related Stories: