சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் மெட்ரோ பணியின்போது தூணில் இருந்து விழுந்து ஜார்க்கண்ட் மாநில இளைஞர் உயிரிழந்தார். ஆற்காடு சாலையில் 40 அடி உயர தூண் மீது ஏறி நின்று பணி செய்தபோது சோரே கஞ்ஜூ (23) தவறி விழுந்து உயிரிழந்தார். பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
