சென்னை: கொடுங்கையூர், இந்திரா நகரை சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் விஜய் ஜோஷ்வா (19). இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு விரைவு ரயிலில் பயணித்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இடமின்றி படிக்கட்டு அருகே நின்றபடி பயணித்தார். ரயில் ஆவடியை கடந்து சென்றபோது விஜய் ஷோஷ்வா திடீரென்று நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
