தடுப்புச்சுவரில் நோட்டீஸ்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கரூர், பிப். 18: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சுங்ககேட் தாந்தோணிமலை, காந்திகிராமம், சுக்காலியூர் ஆகிய முக்கிய சாலைகளின் மையத்தில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த தடுப்புச் சுவர்களில் தனியார் அமைப்புகள் மற்றும் சில கட்சிகளின் சார்பில் விளம்பரங்கள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்படுகிறது.

இவை அனைத்தும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.விபத்தை குறைக்கும் வகையில் இந்த தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விளம்பர நோட்டீஸ்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதற அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

 

Related Stories: