கடலுார், பிப். 18: கடலுார் மத்திய சிறையில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு சோதனை குழுவிவர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மத்திய சிறை தண்டனை தொகுதி 16ன் பின்புறம் உள்ள பலா மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு செல்போன் மற்றும் இரண்டு செல்போன் பேட்டரிகளை கண்டெடுத்தனர். அவற்றை யார் அங்கே வைத்தது என தெரியவில்லை. இது குறித்து சிறை அலுவலர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
