சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதியதாகச் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
