சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து நேற்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் சட்டசபை தேர்தலுக்காக நமது கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை நிலைய அலுவலகத்தில் நடக்கிறது. இதில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மநீம சார்பில், சட்டசபை தேர்தல் பிரசாரம் மற்றும் அதுகுறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
