என்எஸ்எஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, ஜன. 28: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அருள் தலைமை வைத்தார். 2018 -19 கல்வி ஆண்டில் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 240 மணி நேரத்திற்கு மேல் சேவையாற்றிய மாணவ தொண்டர்களை பாராட்டி இந்திய அரசினுடைய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் மாநில பள்ளி கல்வி துறை சார்பாக திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியவற்றை தலைமை ஆசிரியர் அருள் மாணவர்களுக்கு வழங்கினார்.இதில் ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபிக்,ஆசிரியர் நாச்சிமுத்து, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சக்கரபாணி கலந்துகொண்டனர்.

Related Stories: