திருவாரூர், ஜன. 28: :காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரி திருவாரூரில் டிஎன்பிஎஸ்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்துவரும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்தப்படி தகுதியுள்ள கொள்முதல் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், நெல்கொள்முதலுக்கான சாக்கு, சணல் உள்ளிட்ட தளவாட பொருட்களை கட்டுப்பாடில்லாமல் வழங்கிட வேண்டும், கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கிட வேண்டும்என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பாக ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்புடைய டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், இணை பொது செயலாளர் குணசேகரன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.