கும்பகோணம், ஜன.28: கும்பகோணத்தில் திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், ரமேஷ்குமார், விஜயகுமார், ரஞ்சன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், தலைமை பேச்சாளர் நெடுஞ்செழின் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது: தாய் மொழிக்காக போராடிய தாளமுத்து நடராசன், கீழப்பழுர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் ரங்கநாதன், கீரனூர் முத்து, மாணவர் ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீலமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் நமது தாய் மொழி அழியக்கூடாது என்பதற்காக தன்னுயிர் நீத்து தியாகம் செய்தனர். நாட்டின் 3வது பெரிய கட்சியின் நாடாளுமன்ற தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். ஐ.நா சபையில் 193 நாடுகள் கையெழுத்திடுகின்றன.